உணவில் கிடந்த கம்பளி பூச்சி pt web
தமிழ்நாடு

மன்னார்குடி | சட்னியில் கிடந்த கம்பளிப் பூச்சி... இளைஞருக்கு வாந்தி மயக்கம்!

PT WEB

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரை சேர்ந்த 30 வயது இளைஞர் பிரவீன்குமார், மன்னார்குடி வடசேரி சாலையில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

கார சட்னியில் கம்பளிப்பூச்சி

கடையில் இருந்து வீட்டுக்கு செல்ல முடியாத அவர், மன்னார்குடி பெரிய கடை வீதியில் உள்ள உணவகத்தில் பார்சல் வாங்கி வந்து பொடி தோசை சாப்பிட்டுள்ளார். அப்போது, சட்னியில் கம்பளி பூச்சி இருந்தது தெரியவந்தது. உடனடியாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவர், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.