தமிழ்நாடு

இறைச்சி வாங்க சென்ற 8-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

webteam

இறைச்சி வாங்க சென்ற 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, அருகேயுள்ள கோழி இறைச்சி கடைக்கு கறி வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் சமீம் என்ற இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமீம் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.