தமிழ்நாடு

மதுரை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு

kaleelrahman

மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் 21 வயது இளம்பெண் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியை சேர்ந்த பாபுலால் என்பவரின் மகள் துர்கா தேவி. இவர், மதுரைகீழவெளி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தனது தந்தையுடன் சென்றுள்ளார்.


அப்போது சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே துர்காதேவி தலை நசுங்கி உயிரிழந்தார். பின்னர் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை கீழவெளி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரிகள் மற்றும் தண்ணீர் லாரிகளை ஓட்டும் வாகன ஓட்டிகள் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த துர்கா தேவிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.