உறுப்பினர்கள் கூட்டம் pt desk
தமிழ்நாடு

மதுரை | திமுக நிர்வாகிகள் இடையே மோதல் - கிளைச் செயலாளர் காவல் நிலையத்தில் புகார்

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை வலையங்குளம் பகுதியில் நேற்று திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்டையன், உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், வலையங்குளம் கிளைச் செயலாளர் அழகுமலை என்பவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் முகத்தில் காயமடைந்த அழகுமலை சட்டை முழுவதும் ரத்தக்கரைகளுடன் பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உறுப்பினர்கள் கூட்டம்

நேற்று கள்ளிக்குடி அருகே வில்லூர் கிராமத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், திமுக நிர்வாகிகள் இடையே மோதிக்கொண்ட சம்பவம் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.