தமிழ்நாடு

விதிகளை மீறி சொகுசு பங்களா: கமலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

rajakannan

சென்னை ஈசிஆரில் விதிகளை மீறி சொகுசு பங்களா கட்டியதாக 138 விஐபிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட விஐபிக்கள் சொகுசு பங்களா கட்டியுள்ளனர். இதில், உரிய விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றதும். அப்போது, விதிகளை மீறி சொகுசு பங்களா கட்டிய புகாரில் 138 விஐபிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சிஎம்டிஏ, மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் பங்களாக்களும் அடங்கும். பின்னர், வழக்கு விசாரணை ஏப்ரல் 9ம் தேதிக்கு உயர்நீதிமன்றம்  ஒத்திவைத்தது.