சென்னை உயர்நீதிமன்றம் PT
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | விஷ சாராயத்தால் உயிரிழந்தோருக்கான இழப்பீடு | “அரசின் முடிவில் நீதிமன்றம் தடையிடாது”

PT WEB

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் “விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கக் கூடாது, இதுபோன்ற உயிர்பலிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, “அரசின் முடிவில் நீதிமன்றம் தடையிடாது. எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பர நோக்கத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனக்கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.