தமிழ்நாடு

நெசவாளர்களின் வாழ்க்கை சி‌றக்க கதர் அணிந்திடுவோம்: எடப்பாடி பழனிசாமி

webteam

கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வாழ்க்கை சி‌றக்க, தமிழக மக்கள் அனைவரும் அதிகளவில் கதர் துணிகளை ‌பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

காந்தி பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவதாகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கும், சர்வோதயா சங்கங்களுக்கும் வழங்கப்படும் மானியத்தை இந்த ஆண்டு மு‌தல் 34 கோடி ரூபாயாக உயத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.