டிஎன்பிஎஸ்சி  முகநூல்
தமிழ்நாடு

குரூப்-2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கலா? கால அவகாசம் நீட்டிப்பு ஏன்?

PT WEB

டிஎன்பிஎஸ்சி குரூப்-2,குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2 நிலையில் காலியாகவுள்ள 507 இடங்களையும், அதேபோல் குரூப்-2ஏ நிலையில் காலியாகவுள்ள ஆயிரத்து 820 இடங்களையும் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை டி. என்.பி.எஸ்.சி. ஜூன் 20-ம் தேதி வெளியிட்டது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.