தமிழ்நாடு

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 11 மாடுகள் பலி

webteam

கிருஷ்ணகிரி அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 மாடுகள் உயிரிழந்தன. 

பெங்களூருவில் இருந்து 25 மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சியை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினம் பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் மீட்புக்குழுவினர் கிரேன் மூலம் மாடுகளை மீட்டனர்.