தமிழ்நாடு

மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன்

webteam

மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் தான் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்க முடியும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ’இந்திய தேசம் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் அமைக்கப்பட்டது.  மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சுயாட்சி அதிகாரம் மாநிலங்களுக்கும் தேவை. மாநில அரசுக்கு அதிகாரங்கள் சுதந்திரமாக இருந்தால் தான் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க முடியும்’ என்று தெரிவித்தார்.