எம்பி கனிமொழி pt web
தமிழ்நாடு

“ஜாதிப் பெயர்களோட பத்திரிக்கை அடிக்காதீங்க; நாம் எல்லோரும் மனிதர்கள்.. உழைப்பாளிகள்” - கனிமொழி எம்பி

Angeshwar G

நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தின் சார்பில், வியாபாரிகளுக்கான கட்டட திறப்பு விழா, விடுதி ஒன்றிற்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், “ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் அவர் படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், வகுப்பில் இருந்த மாணவர்கள், ‘நீங்கள் ஏன் தமிழ்நாடு என தனியாகவே இருக்கிறீர்கள். எங்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள்?’ என கேட்டுள்ளனர். அதற்கு அவர், வகுப்பில் இருந்த பெயர்ப் பட்டியலை எடுத்துக் காட்டி, ‘உங்களது பெயரையும் பாருங்கள். எங்களது பெயரையும் பாருங்கள். எங்கள் பெயருக்கு பின்னால் எங்களது தந்தை பெயரோடு நிறுத்திக் கொண்டோம். ஆனால், உங்களது பெயரைப் பார்த்தால் நீங்கள் எந்த ஜாதி, எந்த ஊர் என்பதெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது’ என தெரிவித்துளார்.

இது தந்தை பெரியார் மண், பேரறிஞர் அண்ணா மண், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் மண், கலைஞருடைய மண். தயவு செய்து இன்னொரு அழைப்பிதழில் இத்தனை ஜாதிப் பெயர்களோடு அடிக்காதீர்கள். நாமெல்லாம் மனிதர்கள். அத்தனையும் தாண்டி உழைப்பாளிகள். இணைந்து செயல்படுவோம்., தமிழர்களாக உயர்ந்து நிற்போம்” என தெரிவித்தார்.