வன்கொடுமை கோப்புப்படம்
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: ஊராட்சி மன்றத் தலைவர் மீது பெண் பாலியல் புகார் - வீடியோ வெளியிட்டு வேதனை

webteam

செய்தியாளர்: முத்துக்குமரன்

கள்ளக்குறிச்சியின் சாத்தப்புத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பச்சைப் பிள்ளை என்பவர், ‘100 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக ஆட்களை சேர்த்து போலியாக பணம் சம்பாதித்து வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவேன்’ என பெண்ணொருவரை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

அதேபோல், இரவு நேரங்களில் தொலைபேசியில் அழைத்து அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் அவரிடம் மறுப்பு தெரிவித்ததால், ஐந்து பேரை அழைத்து வந்து, என்னை கடுமையாக தாக்கினார். மேலும் எனது உடையை கிழித்துவிட்டர்” என்று கூறியுள்ளார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அப்பெண், “எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது” என்றுள்ளார். இந்தப் புகார் குறித்து தியாகதுருகம் போலீசார், விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.