தமிழ்நாடு

நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார்: உச்சநீதிமன்றத்தில் தகவல்

webteam

நீதிபதி கர்ணன் எங்கும் தப்பியோடவில்லை. சென்னையில் தான் இருக்கிறார் என அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா காவல்துறையினர் சென்னை, தடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கர்ணனைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நீதிபதி கர்ணன் எங்கும் தப்பியோடவில்லை. அவர் சென்னையில்தான் இருக்கிறார். அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை திரும்பப் பெற வேண்டும். நீதிமன்ற தண்டனை தொடர்பாக, அவர் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத கால சிறைத் தண்டனை அளித்திருந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள அவரை கொல்கத்தா காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.