தமிழ்நாடு

சிறையில் ஜீவசமாதி: முருகனிடம் பேச்சுவார்த்தை

webteam

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகன், ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்ததை அடுத்து அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

26 ஆண்டுகளாக சிறையிலுள்ள முருகன், விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாகவும், அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என சிறைத்துறையிடம் மனு அளித்திருந்தார். இன்று ஜீவசமாதி அடையப்போவதாக கூறியிருந்த நிலையில், முருகனிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.