தமிழ்நாடு

திருவாரூரில் 5வது நாளாக தொடர் போராட்டம்

webteam

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி 5 ஆவது நாளாக திருவாரூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நிரந்தரச் சட்டம் கொண்டு வந்த பிறகே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் பெண்கள், மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ள இந்தப் போராட்டத்தில் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.