தமிழ்நாடு

செய்யது பீடி குழுமத்துக்கு சொந்தமான இடங்க‌ளில் 2வது நாளாக சோதனை: ரூ.3 கோடி பறிமுதல்

செய்யது பீடி குழுமத்துக்கு சொந்தமான இடங்க‌ளில் 2வது நாளாக சோதனை: ரூ.3 கோடி பறிமுதல்

webteam

செய்யது பீடி குழும நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனையில் கணக்கில் வராத 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் செய்யது பீடி குழும நிறுவனத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செய்யது பீடியின் தலைமையிடம் அமைந்துள்ள நெல்லையில் 9 இடங்களிலும், மதுரையில் 2 இடங்களிலும், சென்னையில் பெல்ஸ் சாலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இக்குழுமம் விற்பனையை குறைத்து காட்டியதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.