அமைச்சர் சிவசங்கர் முகநூல்
தமிழ்நாடு

Chennai air show|”15 லட்சம் பேருக்கு அரசே தண்ணீர் வழங்குவது சாத்தியம் இல்லை..” - அமைச்சர் சிவசங்கர்

PT WEB

மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். "சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை ஆரம்பித்து வைத்ததே அதிமுக தான். கட்சியை தக்க வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி போராட்டங்களை நடத்துகிறார்.

அதிமுகவுக்குள் பல்வேறு கலகங்கள் நடைபெறுகிறது. அவர்கள் தொடங்கி வைத்தப் பணிகளையே அவர்களே எதிர்ப்பதாக சொல்லப்படுகிறது. இதில், எஸ்.பி வேலுமணி புதிய யுக்தியை கையாள்வதாக செய்திகள் வெளியாகிறது.” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.