தமிழ்நாடு

கோவை: கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கோவை: கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

JustinDurai
கோவையில் கோயிலுக்கு சொந்தமான சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சின்ன தடாகம் பகுதியில் உள்ள மாரியம்மன், அங்காளம்மன் கோயில்களுக்கு சொந்தமாக 8.8 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தென்னரசு, ரங்கராஜ் ஆகியோர் தற்காலிகக் கூடாரம் அமைத்து நிலத்தை ஆக்கிரமித்து வந்ததாக தெரிகிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையிலும், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.