தமிழ்நாடு

சென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி: சென்னை மாநகராட்சி

rajakannan

சென்னையில் கொரோனா அறிகுறிகளுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள பலரும் சென்னை மாநகராட்சி சார்பில் சோதனைகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள தகவலில், “சென்னையில் இதுவரை 1,973 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி இருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.