இந்திய வானிலை ஆய்வு முகநூல்
தமிழ்நாடு

"தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை" - இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலைகுறித்த எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வபோது தெரிவித்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை தொடரும் என மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல இடங்களில் தரைக்காற்று அதிகபட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான முழு தகவலை கீழ் இணைக்கப்படும் வீடியோவில் காணலாம்...