இறந்தவர் PT
தமிழ்நாடு

மது போதையில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த நபர்

PT WEB

குடும்ப பிரச்னை காரணமாக மதுபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்

ராமநாதபுரம் ‘தாயுமானவர் கோவில்’ பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கும் சரண்யா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கொத்தனார் வேலை செய்யும் பன்னீர்செல்வத்திற்கும் அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்த நிலையில், சம்பவத்தினத்தன்று இரவு மதுபோதையில் இருந்த பன்னீர்செல்வம் தனது மனைவி சரண்யாவை கொலை செய்துவிட்டு, அவரும் கத்தியால் தனக்குத்தானே குத்திக் கொண்டு உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றினர். பின்னர் மோப்பநாய் உதவியுடன் தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு பின் இருவரது உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.