தமிழ்நாடு

சுற்றுச்சுவர் இடிந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் கைது

webteam

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சுவரின் உயரம் 20 அடியாகும். 80 அடி நீளம் கொண்ட அந்தக் கருங்கல் சுற்றுச்சுவரின் அகலம் 2 அடியாகும். தொடர் மழையின் காரணமாக 3 ஆள் உயரம் கொண்ட அந்தச் சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது விழுந்தது.

அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் தரமட்டமாயின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.