Heavy rain pt desk
தமிழ்நாடு

சென்னை புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் விடிய விடிய பெய்த கனமழை – தணிந்தது வெப்பம்!

webteam

சென்னை மற்றும் புறநகர் சென்னையில் மழை!

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பள்ளிகரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், துரைப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில்; குளம் போல் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

rain

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Heavy rain

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட புறநகர் பகுதிகளான புதிய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, பழைய பேருந்து நிலையம், ரோவர் வளைவு, சங்குபேட்டை ஆகிய பகுதிகளில்; நேற்று மதியம் மிதமான சாரல் மழை பெய்தது.