தமிழ்நாடு

ஜிஎஸ்டியை ஆதரித்து மக்களுக்கு துரோகம்: ஸ்டாலின்

webteam

ஜிஎஸ்டியை ஆதரித்து ஆளும் அரசு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் கரசங்கால் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், ஜிஎஸ்டியை ஆதரித்து ஆளும் அரசு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. முதலமைச்சராக இருந்த போது ஜிஎஸ்டியை எதிர்த்த மோடி பிரதமரான பின் நிறைவேற்றி உள்ளார் என கூறினார். ஜிஎஸ்டியால் விலைவாசி கண்டிப்பாக உயரும், ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.