தமிழ்நாடு

இறந்துவிடுவது போல் கனவு: உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி

இறந்துவிடுவது போல் கனவு: உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி

webteam

இறந்துவிடுவது போல் நாள்தோறும் கனவு கண்டு மன உளைச்சலுடன் காணப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் துர்கா என்ற 11ம் வகுப்பு மாணவி. கடந்த ஒருவாரமாக தினமும் இறந்துவிடுவதாக கனவு வந்துள்ளது. இதுகுறித்து தனது தாயிடம் கூறி மன உளைச்சலுடன் இருந்துள்ளார். தாயும் அந்த மாணவிக்கு ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், மன உளைச்சல் அதிகமான நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.