தமிழ்நாடு

புதுக்கோட்டையில் இடிதாக்கி 4 விவசாய தொழிலாளர்கள் உயிரிழப்பு

webteam

புதுக்கோட்டை அருகே இடிதாக்கியதில் வயலில் வேலைப்பார்த்து கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

புதுக்கோட்டை வைத்தூரில் 20க்கும் மேற்பட்டோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இடிதாக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வைத்தூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.