தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இடைக்கால மனு தள்ளுபடி

kaleelrahman

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இடைக்கால மனுவை சென்னை 23வது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஒ.பி.எஸ். இ.பி.எஸ். தேர்வு செல்லாது எனவும், அந்த தேர்தல் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒப்புதல் அளிக்கும் வகையில் நடத்தப்படும் பொதுக்குழுவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டள்ளது.

உறுப்பினர் பட்டியல் வெளியிடாமல், தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நடத்தப்பட்ட தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது பொதுக்குழு கூட்டம் அறிவிப்பது தவறு.

பொதுக்குழு கூட்டத்திற்கு தடை, நடந்து முடிந்த உட்கட்சி தேர்தல் ரத்து மற்றும் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.