தமிழ்நாடு

கோவிலுக்கு சென்ற ‌பக்தர்களை துரத்தித்துரத்தி கடித்த வண்டு

webteam

விருதுநகர் மாவட்டத்தில் மாதாமலை பகுதியில் கடந்தை வண்டு கடிதத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மாதாமலை பகுதி. இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்வார்கள். வாரவிடுமுறை, தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இன்று அதிகளவில் பொதுமக்கள் வந்தனர். மலை பகுதி அருகே தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தேன்கூடு கலைந்ததில், காதுகுத்தும் நிகழ்சிக்காக வநதிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பத்துக்கும் மேற்பட்டோரை கடந்தை வண்டு கடித்தது. இதில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

மேலும் வண்டுகள் தாக்காமல் இருக்க தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திருக்கு வந்து வண்டுகளை அளிக்கும் முயற்சியில் ஈடபட்டு வருகின்றனர். இதே பகுதியில் விஷவண்டுகள் தாக்கபடுவது தொடர்வதாகவும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.