தமிழ்நாடு

மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

Sinekadhara

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கக்கூடிய நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதன்படி, மீனவ குடும்பகளுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத்தால் 1.72 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.