எடப்பாடி பழனிச்சாமி புதியதலைமுறை
தமிழ்நாடு

”தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.. எங்கே சென்றார்கள் 40 எம்.பிக்கள்?” - இபிஎஸ் கேள்வி

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிலையில் 40 எம்.பி.க்கள் எங்கே சென்றார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

PT WEB

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிலையில் 40 எம்.பி.க்கள் எங்கே சென்றார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்பொழுது 40 எம்பிகளும் என்ன சென்றனர்? தமிழக நலனுக்கு பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். முன்னதாக இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.