தமிழ்நாடு

சென்னை வணிக வளாகத்தில் தீவிபத்து

webteam

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வணிக வளாகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள வணிக வளாகத்தின் 8ஆவது மாடியிலுள்ள தனியார் விசா வழங்கும் நிறுவனத்தில் காலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீவிபத்தின் சேத மதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ள போலீசார், விசா நிறுவனத்தின் உரிமையாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சில்க்ஸ், புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகம் என்று தொடர்ந்து சென்னை தீவிபத்துகள் அதிகரித்து வருவதால், தீயணைப்புத்துறையினர் பல்வேறு வணிக வளாகங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.