தமிழ்நாடு

ரொம்ப யோசிப்பாய்ங்களோ? ஆண் வேடத்தில் கொள்ளையடித்த பெண்!

Rasus

சென்னையில் பூட்டிய வீடுகளில் ஆண் வேடத்தில் சென்று கொள்ளையடித்து வந்த பெண்னை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொண்டித்தோப்பு, பெத்து நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். வழக்கறிஞர். நேற்றிரவு இவர் காற்றுக்காகக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். அப்போது திடீரென சத்தம் கேட்டு விழித்து பார்த்தபோது 3 கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. அவர் ’திருடன் திருடன்’ கத்திக்கொண்டே துரத்தினார். அப்போது ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொருக்குப்பேட்டை, அம்பத்தூரைச் சேர்ந்த 16, 17 வயது சிறுவர்கள் என்பதும் 3 வது நபர் ஆண் வேடத்தில் இருந்த பெண் என்பதும் தெரிய வந்தது. அந்த பெண், முத்தியால் பேட்டையைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் டயானா என்றும் தெரிய வந்தது. 

பெண்ணாக சென்றால் சுலபமாகப் பிடித்து விடுவார்கள் என்றும் ஆண் வேடத்தில் பாரிமுனை பகுதியில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். இவருக்கு உதவியாக இந்த சிறுவர்களை பயன்படுத்தி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஏழுகிணறு போலீசார் கைது செய்து, கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.