தமிழ்நாடு

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் பொருட்காட்சி

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் பொருட்காட்சி

Veeramani

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் 47-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

சென்னை தீவுத்திடலில் 70 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பொருட்காட்சி நடைபெறவுள்ளது.  கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஜனவரியில் இது நடைபெறுகிறதுஇப்பொருட்காட்சியில் அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனம், 4 பிற மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. மேலும், புதிய திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்படவுள்ளது. பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், ராட்டினம் போன்ற சிறப்பு அம்சங்களும் இடம் பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருட்காட்சியில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 35, சிறுவர்களுக்கு ரூ 20, மாணவர்களுக்கு ரூ 20 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.