தமிழ்நாடு

ஆளுநரை இன்று சந்திக்கின்றனர் ஈபிஎஸ், ஓபிஎஸ்

JustinDurai
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர்.
காலை 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிமுக இரண்டு நாட்கள் புறக்கணித்துள்ளதுடன், கோடநாடு வழக்கில் ஆளும் கட்சியுடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநருடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.