மூத்த மருத்துவர் குகானந்தம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மூத்த மருத்துவர் குகானந்தம் காலமானார்!

PT WEB

தமிழ்நாடு அரசின் கோவிட் பெருந்தொற்று தடுப்பு நிபுணர் குழுவின் உறுப்பினரும், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் முன்னாள் திட்ட அதிகாரியுமான மூத்த மருத்துவர் குகானந்தம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

சென்னை மாநகராட்சின் முன்னாள் நகர் நல அலுவலர், சிம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவத்துறை தலைவர், யூனிசெப் அமைப்பின் மூத்த மருத்துவ ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை மருத்துவர் குகானந்தம் வகித்து வந்தார். காலரா தடுப்பு குறித்த மருத்துவர் குகானந்தத்தின் நூல், உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. சென்னை கொளத்தூரில் வசித்து வந்த மருத்துவர் குகானந்தம் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்றும், கீழ்ப்பாக்கம் கல்லறையில் உடல்நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர் குகானந்தம் உயிரிழப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.