தமிழ்நாடு

ஏற்காடு செல்ல இபாஸ் கட்டாயம் - சேலம் மாவட்ட ஆட்சியர்

webteam

சுற்றுலாதளத்திற்கு செல்ல இபாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தனை நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வந்த இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற்று செல்லலாம் எனவும் தமிழக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நாளைமுதல் அமல்படுத்தப்பட தளர்வுகள் அமலுக்கு வர உள்ள நிலையில் ஏற்காடு செல்ல இபாஸ் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி சுற்றுலாதளத்திற்கு செல்ல இபாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.