தமிழ்நாடு

எம்ஜிஆரின் முகமூடியை அணிந்து கொள்ள பழனிசாமி முயற்சி: துரைமுருகன் சாடல்

Rasus

தனது ஊழல்களை மறைப்பதற்காக எம்.ஜிஆரின் முகமூடியை எடப்பாடி பழனிசாமி அணிந்து கொள்ள முயற்சிப்பதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடும் நேரத்தில், அரசு இணையதளத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள துரைமுருகன், முதலமைச்சரின் இத்தகைய செயலுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளர். திமுக தலைவர் கருணாநிதியை விமர்சிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியில்லை எனவும் சாடியுள்ளார்.

தனது ஊழல்களை மறைப்பதற்காக எம்.ஜிஆரின் முகமூடியை எடப்பாடி பழனிசாமி அணிந்து கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சிறப்பான நலத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றிய கருணாநிதி குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.