தமிழ்நாடு

முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்த மோப்ப நாய்

webteam

காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வில் அப்பிரிவின் மோப்‌பநாய்‌ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது காவல்துறை பிரிவின் மோப்ப நாய்களின் சாகசம் நடைபெற்றது. இதில், காவல்துறையைச் சேர்ந்த லிங்கா, லியோ, வாலி, ராக்கி, வீரா ஆகிய நாய்கள் காவல்துறையினருடன் சாகங்களை நிகழ்த்தியது. 

அப்போது, லியோ என்ற மோப்பநாய் பூங்கொத்தை ஏந்தி வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரவேற்றது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கியுடன் நிற்கும் திருடனை பதுங்கி சென்று பாய்ந்து பிடிக்கும் சாகசம் உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டது.