தமிழ்நாடு

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

நிவேதா ஜெகராஜா

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா, சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் தற்கொலை செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

35 வயதான இவரின் தற்கொலை முடிவு குறித்து, கணவர் தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடந்துவருவதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக இறந்திருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக தமிழன் பிரசன்னா, தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர்.