தமிழ்நாடு

பியூஷ் மானுஷ் மீதான தாக்குதல் - ஸ்டாலின் கண்டனம்

webteam

சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷ் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பியூஷ் மானுஷ் மீதான தாக்குதல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே இந்தத் தாக்குதலை பார்க்க வே‌ண்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில், பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தொண்டர்களை தாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கிய பியூஷ் மானுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்‌கை எடுக்க வே‌ண்டும் என்றும் பொது அமைதி காக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.