தமிழ்நாடு

சென்னை: 30 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

JustinDurai
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் உணர்வாளர்கள், இஸ்லாமியர்களை சுதந்திர தினத்தையொட்டி விடுதலை செய்ய வலியுறுத்தி மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா சாலை தர்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
800-க்கும் மேற்பட்ட கைதிகள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.