தமிழ்நாடு

பாம்பை பிடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு சோக முடிவு: பதைபதைக்கும் காட்சிகள்

kaleelrahman

வடலூர் அருகே வீட்டில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் பாம்பு கடித்து உயிரிழந்தார்

கடலூர் மாவட்டம் வடலூர் கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அசோக். ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர், நேற்று இவரது வீட்டருகே உள்ள பழனிவேல் என்பவரது வீட்டில் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பை பிடிக்க முயற்சித்துள்ளார். பின்பு பாம்பை பிடித்து சாக்குப் பையில் போடும்போது பாம்பு அவரை கடித்துள்ளது. அதனால் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவவீரர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,