தமிழ்நாடு

வங்கிகளிலேயே 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை: கடலூர் மக்கள் புகார்

வங்கிகளிலேயே 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை: கடலூர் மக்கள் புகார்

webteam

கடலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்தை கடைக்காரர்கள் மட்டுமின்றி, வங்கிகளும் வாங்க மறுப்பதால் பத்து ரூபாய் கைக்கு வந்தாலே பதற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பத்துரூபாய் நாணயத்தை யாரும் வாங்குவதில்லை என்ற புகார் கடலூர் முழுவதும் இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்க வங்கிகளே மறுப்பு தெரிவிப்பதால், அவை செல்லாதது என்ற அச்சம் நிலவுகிறது. பத்துரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தும்கூட அதனை நடைமுறையில் ஏற்க மறுக்கிறார்கள் மக்கள். பணமதிப்பு நீக்க சமயத்தில் அதிக அளவு கொடுத்த பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகளுக்கு கொண்டு செல்லும் வியாபாரிகளிடம் வங்கி அதிகாரிகள் வாங்குவதில்லை என்ற புகார் நிலவுகிறது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷிடம் கேட்டபோது ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.