Dhoni pt desk
தமிழ்நாடு

கடைசி ஐபிஎல் போட்டியா! தென்னை மட்டையில் தோனியின் உருவம் - புதுக்கோட்டை இளைஞர்கள் அசத்தல்

webteam

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேதாஜி என்ற இளைஞரும், மருத்துவம் படிக்கும் குகன் என்ற மாணவரும் சேர்ந்து, தென்ன மட்டையில் தோனியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.

Youths

ஐபிஎல் தொடர் லீக் போட்டியின் கடைசி நாளான இன்று, சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே சென்னை அணி ப்ளே ஆப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். ஒருவேளை வெற்றி வாய்ப்பை இழந்தால் தோனி இனிமேல் விளையாடுவாரா என்ற சந்தேகமும் உள்ளது.

அதனால், தோனியின் உருவப்படத்தை நெகிழ்வோடு வரைந்து உள்ளதாகவும், தோனியின் புகழைப் போற்றும் வகையில் இந்த தென்ன மட்டையிலான ஓவியத்தை வரைந்து உள்ளதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.