தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி அழகிரி மீது குற்றப்பத்திரிகை

கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி அழகிரி மீது குற்றப்பத்திரிகை

webteam

ரூ.257 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதி அழகிரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு வழக்கில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துரைதயாநிதி உட்பட 15 பேர் மீது 5191 பக்க குற்றப்பத்திரிக்கையை மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு 257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.