தமிழ்நாடு

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா : குடும்பத்தினருக்கும் பரிசோதனை..!

webteam

சென்னை அருகே உள்ள மாங்காடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர்  ஒருவருக்கு கடந்த 28ஆம் தேதி காய்ச்சல், சளி அதிகளவில் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அத்துடன் அவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் அருகாமையில் வசித்த 20 பேரை கொரோனா பரிசோதனை செய்ய மதுரவாயலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வளசரவாக்கம் மண்டல சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.