செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிய விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனை அடுத்து அமர் பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கு மீண்டும் விசராணைக்கு வருகையில் நேரில் வந்து ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளார்.