திமுக பிரமுகர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“பணத்தை கொடு.. இல்லாட்டி வீடு கட்ட முடியாது” – முதியவரை தாக்கியதாக திமுக பிரமுகர்கள் மீது புகார்

webteam

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருபவர் ஆந்திராவை சேர்ந்த மண்ணு ரமணய்யா (74). 14 வீடுகள் கொண்ட குடியிருப்பை, கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கட்டி வருகிறார்.

திமுக நிர்வாகி

முடியும் தருவாயில் அக்குடியிருப்பு இருக்கும் நிலையில், 188வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்களான திமுக பிரமுகர்கள் விமல் என பெயர் கொண்ட இருவர் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர் எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இருமுறை மிரட்டிச் சென்ற அந்நபர்கள் நேற்று சென்று பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர். ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவர் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Hospital

இதனையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் மீது முதியவர் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.