தமிழ்நாடு

திருவள்ளூர்: நீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

Sinekadhara

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரும்புக்குப்பம் கிராமத்தின் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் மூழ்கி நர்மதா, அஸ்விதா, ஜீவிதா ஆகிய சிறுமிகளும் சுமதி, ஜோதி ஆகிய பெண்களும் உயிரிழந்தனர். ஒருவர் பின் ஒருவர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நேரிட்ட இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.