தமிழ்நாடு

65 வயதுக்குப் பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

webteam

65 வயதுக்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் பிறந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார். ஆட்சித் தொடரக்கூடது என்று கமல்ஹாசன் பேசுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார். ஆட்சி மீது குற்றம்சாட்டுபவர்கள் என்ன குறை கண்டார்கள் என்றும் முதலமைச்சர் வினவினார். விஸ்வரூபம் படம் வெளியாக உதவி செய்தவர் ஜெயலலிதா என்று பேசிய அவர், கமல்ஹாசன் அந்த நன்றியை மறந்து பேசுவதாகவும் குறிப்பிட்டார். புதிய தலைமுறையின் சிறப்பு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு 62 வயது என்பது குறிப்பிடத்தக்கது.